நான் பலமுறை யோசித்ததுண்டு, இந்த நூற்றாண்டில்
வாழும் சாமியார்கள் ஏன் கோடி கோடியாக
சொத்துக்கள் குவித்துள்ளனர் என்று காரணம் தேடி ,காலங்கள் கடந்து விட்ட நிலையில் சட்டென்று
உண்மை புரிந்தது.

பிறகு ,அவ்வளவு கோடி பணம் எதற்காக? உண்ணவா? உடுக்கவா ? பிறரைக் கெடுக்கவா ?
பிறரைக் கெடுக்கத்தான் என்று சொன்னாலும் ஓரளவுத்தான் பொருந்தும். ஏன் எனில் எவ்வளவு
பேரின் குடியைத்தான்,தன் வாழ் நாளில் ஒரு மனிதன் அழிக்கமுடியும் ? சொல்லுங்களேன் .
ஆனால் நான் புரிந்த உண்மை யாதெனில் , கண்டிப்பாக இந்த வாழும் சாமியார்கள் பணம் சேர்க்க (சம்பாதிப்பதல்ல) சில
“கோல்மால்” சில “தகிடுதித்தம்” போன்ற வேலைகளை செய்தாக வேண்டும் .அதனால் என்றோ வரக்
கூடிய பிரச்சினையிலிருந்து தப்பிக்க இந்த பணம் உதவுகிறது. என்று சொன்னால் மிகையாகாது.
தனக்கு பிற்காலத்தில் வைக்கப்படும் “ஆப்புகளை” அகற்றவும் அப்பணம் ஆதரவளிக்கிறது
.எவ்வளவு சர்ச்சையில் சிக்கி ,பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட்டாலும் வந்த வேகத்திலேயே
அத்தனையும் மாயமாகிவிடுகிறது .இதிலிருந்தே தெரியவில்லையா, பணம் பாதாளம் வரை பாயுமென்று
.ஆகையால் கெட்டவர்களுக்கு நல்லவர்களால் வைக்கப்படும் “ஆப்பை” அசைக்க ஒரு குரங்கு தேவை ,அதுவே பணம்.
ஆகவே இதுதான் பணத்தை சேமிப்பதன் நோக்கம் என்பது புலனாகிறது.
எனவே காரணம் புரிந்த நிம்மதியுடன் துயிலச் சென்றேன்.
.
0 comments:
Post a Comment